/* */

குன்னூரில் பலாப்பழ விற்பனை மந்தம்

சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதால் பலாப்பழ விற்பனை மந்தமாகி உள்ளது. இதனால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

குன்னூரில் பலாப்பழ விற்பனை மந்தம்
X

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளான பர்லியார், மரப்பாலம், கே.என்.ஆர். போன்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்களில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன. தற்போது பலாப்பழம் சீசன் துவங்கியுள்ளதால் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் யானைகள் முகாமிட ஆரம்பித்துள்ளன. இதனால் மலை பாதைகளின் சாலை ஓரங்களில் பலாபழம் விற்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இருந்தபோதிலும் குன்னூர் பகுதிகளில் 5 கிலோ எடை கொண்ட பலாபழங்கள் 150 முதல் 200 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல் உள்ளூர்வாசிகளும் இதனை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் விளையக்கூடிய பலாபழங்கள் இயற்கையான முறையில் விளைவதால் அதிசுவை பெற்றுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Updated On: 10 April 2021 12:53 PM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  3. இந்தியா
    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல்...
  4. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  5. இந்தியா
    விஜயகாந்த்துக்கு மே 9ம் தேதி பத்மபூஷன் விருது: பிரேமலதா தகவல்
  6. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு
  7. லைஃப்ஸ்டைல்
    இனிப்பு பெருஞ்சீரகம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா ஒரு ஆழ்கடல்..! கன்னட மொழியில் அப்பா மேற்கோள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  10. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...