Begin typing your search above and press return to search.
124-வது உதகை மலர்க்காட்சியில் கலை நிகழ்ச்சி : பார்வையிட்டார் முதல்வர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 124-வது உதகை மலர்க்காட்சியினை தொடங்கி வைத்து, கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
HIGHLIGHTS
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (20.5.2022) நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 124-வது உதகை மலர்க்காட்சியினை தொடங்கி வைத்து, கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, சட்டமன்ற உறுப்பினர் ஆர். கணேஷ், நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் சா.ப. அம்ரித், இ.ஆ.ப., தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.