/* */

யானைக்கு தீ வைத்த 2 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்

யானைக்கு தீ வைத்த 2 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்
X

உதகை அருகே காட்டுயானைக்கு தீ வைத்த விவகாரத்தில் தொடர்புடைய 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் மாவனல்லா பகுதியில் காயத்துடன் ஒற்றை ஆண் காட்டு யானை சுற்றித் திரிந்தது. இந்த யானை தனியார் தங்கும் விடுதிக்குள் கடந்த ஜனவரி மாதம் 3-ந்தேதி புகுந்தது. இதனால் ஆத்திரமடைந்த தனியார் தங்கும் விடுதி உரிமையாளர் ரேமாண்ட் டீன் மற்றும் கூலி தொழிலாளி பிரசாந்த் ஆகியோர் யானை மீது தீப்பந்தத்தை பற்ற வைத்து வீசினர். இதனால் காது பகுதியில் தீ பற்றியதால் யானை துடிதுடித்து தீக்காயத்துடன் வனப்பகுதிக்குள் ஓடியது . மேலும் யானையின் காதில் இருந்து ரத்தம் தொடர்ந்து வெளியேறியது.

பின்னர் ஜனவரி 19-ந்தேதி அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. யானைக்கு தீ வைத்த சம்பவம் குறித்த வீடியோவும் வெளியானது. அதனையடுத்து விடுதி உரிமையாளர்கள் உள்பட இருவரும் கைது செய்யப்பட்டு குன்னூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ரிக்கி ரெயான் தலைமறைவாக இருந்து வருகிறார். இந்நிலையில் யானைக்கு உயிருடன் தீ வைத்த விடுதி உரிமையாளர்கள் ரேமாண்ட் டீன் மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 10 March 2021 1:53 PM GMT

Related News

Latest News

  1. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  2. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  3. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  4. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  5. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  6. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  8. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  9. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!