Begin typing your search above and press return to search.
நாமக்கல்லில் விஷம் குடித்து பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
நாமக்கல்லில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
HIGHLIGHTS
நாமக்கல், நல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். அவரது மனைவி சத்யா (28). முருகானந்தம் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இதனால் விரக்தி அடைந்த சத்யா கடந்த 11-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சத்யா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.