/* */

நாமக்கல் அருகே அரசு பஸ் மோதி நகைக்கடை ஊழியர் பலி

நாமக்கல் அருகே அரசு பஸ் மோதியதால் மோட்டார் பைக்கில் சென்ற நகைக்கடை ஊழியர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே அரசு பஸ் மோதி நகைக்கடை ஊழியர் பலி
X

நாமக்கல் மாவட்டம், என்.புதுப்பட்டி அடுத்த நல்லூரை சேர்ந்தவர் ரவிக்குமார் (37 ). நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் நகை கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு கடை வேலையை முடித்து விட்டு, முசிறியில் உள்ள தனது மாமனார் வீட்டில் இருக்கும் மனைவி, குழந்தைகளை பார்ப்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் முசிறி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

நாமக்கல் - திருச்சி மெயின் ரோட்டில் வளையப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது, நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று, அவர் மீது மோதியது, இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து, அவரது அம்மா வளர்மதி மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ் டிரைவர் பஞ்சவர்ணம் (53) என்பவரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Updated On: 23 July 2021 3:15 AM GMT

Related News