/* */

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாமக்கல்லில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் வரும் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரையிலும் மற்றும் 22ம் தேதியும் மது விற்பனைக்கு தடை

HIGHLIGHTS

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாமக்கல்லில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
X

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் வரும் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரையிலும் மற்றும் 22ம் தேதியும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறவுள்ளது.

இதனால், நாமக்கல் மாவட்டத்தில் முனிசிபாலிட்டி மற்றும் மற்றும் டவுன் பஞ்சாயத்து பகுதிகளிலும், அதைச்சுற்றியுள்ள 5 கி.மீ தூரத்திற்கும், வரும் 17ம் தேதி காலை முதல் 19 ம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகள், அதற்கு அருகில் 5 கி.மீ. சுற்றளவில் உள்ள பகுதிகளில் வரும் 22 ம் தேதியும் பார்கள், டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும்.

அந்த நாள்களில் மதுபானங்களை விற்பனை செய்வதோ, பார்களை திறப்பதோ அல்லது அவற்றை தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு எடுத்து செல்வதோ தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 9 Feb 2022 10:15 AM GMT

Related News