/* */

நாமக்கல்லில் வரும் 4ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 4ம் தேதி தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் வரும் 4ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்
X

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 4ம் தேதி தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தனியார்துறை நிறுவனங்களும் - தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வெள்ளிக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இவ்வாரத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 4ம் தேதி நடைபெறுகிறது. எனவே, தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டு நேரில் தேர்வு செய்து கொள்ளலாம்.

இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு மேலாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், மார்க்கெட்டிங் எக்ஸிக்ய்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், கேஷியர், டைப்பிஸ்ட், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டென்டு போன்ற பணிகளுக்கு தேர்வு செய்யவுள்ளனர். இம்முகாமில் 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சிபெறாதவர், 12ம் வகுப்பு, டிப்ளமோ ,பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ (தொழிற்பழகுநர்) பயிற்சி மற்றும் கம்ப்யூட்டரில் ஜாவா, டேலி முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித்தகுதி உள்ளோரும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

மேலும் தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகம் வழங்கும் இலவச திறன்பயிற்சிகளில் சேர பதிவும் ஆலோசனையும் வழங்கப்படும். இம்முகாம் முற்றிலும் இலவசமானது. மேலும், இவ்வேலைவாய்ப்பு முகாமின் மூலம் பணிவாய்ப்பு பெற்றவரது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே, மேற்படி பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைவரும் வரும் 4ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Updated On: 1 March 2022 11:00 AM GMT

Related News