/* */

நாமக்கல் மாவட்டத்தில் 2 மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி

நாமக்கல் மாவட்டத்தில் வரும் ஜூன் 1 முதல் 2 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் 2 மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி
X

பைல் படம்.

தமிழகம் முழுவதும் இந்தாண்டு பிளஸ்-2 தேர்வு கடந்த 5-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. முக்கிய தேர்வுகள் முடிவுற்றன. தொழிற்கல்வி பிரிவில் சில பள்ளிகளில் நாளை 28ம் தேதி சனிக்கிழமையுடன் தேர்வு நிறைவுபெறுகிறது. இதையொட்டி வருகிற ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் பிளஸ்-2 விடைத்தாள்களை திருத்த பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடுகளை செய்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ரெட்டிப்பட்டி பாரதி மேல்நிலைப்பள்ளி, காடச்சநல்லூர் எஸ்.பி.கே. பள்ளி ஆகிய 2 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த பணியில் முதன்மை மதிப்பீட்டாளர்கள், உதவி மதிப்பீட்டாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள் என 500-க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தினசரி சுமார் 20 ஆயிரம் விடைத்தாள்கள் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Updated On: 27 May 2022 12:45 AM GMT

Related News