பெற்றோர் கண்டித்ததால் விரக்தி; 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை
namakkal news, namakkal news today- பரமத்தி வேலூர் அருகே பெற்றோர் கண்டித்ததால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.
HIGHLIGHTS
namakkal news, namakkal news today- நாமக்கல், சேலம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் பேட்டரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அன்புச்செல்வி. இவர்களுக்கு விக்னேஸ்வரன் (15) என்ற மகனும், பிரியதர்ஷினி (13) என்ற மகளும் இருந்தனர். விக்னேஸ்வரன் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து பொதுத்தேர்வு எழுதியுள்ளார். இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.
இந்நிலையில் விக்னேஸ்வரன் ஒழுங்காக படிக்கவில்லை எனவும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வையும் ஒழுங்காக எழுதவில்லை எனவும் பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் விக்னேஸ்வரன் விரக்தியடைந்து காணப்பட்டார். இந்நிலையில், விக்னேஸ்வரன் பரமத்திவேலூர் அருகே படமுடிபாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை, விக்னேஸ்வரன் திடீரென காணவில்லை. அவரது பாட்டி வீட்டிற்கு அருகில் உள்ள பகுதியில் தேடிப்பார்த்தனர். பின்னர் வீட்டில் உள்ள மற்றொரு அறைக்கு சென்று பார்த்தபோது, விக்னேஸ்வரன் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு பாட்டி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் நாமக்கல்லில் உள்ள தனது மகள் அன்புச்செல்வி மற்றும் ப.வேலூர் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விக்னேஸ்வரனின் உடலை கைப்பற்றி, ப.வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து ப.வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்னும் சில நாட்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரவுள்ள நிலையில், ஒழுங்காக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்ததால் விரக்தியடைந்த 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.