/* */

நாமக்கல்லில் மார்ச் 17 ஆம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

நாமக்கல் நகரில் மார்ச் 17 ஆம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் மார்ச் 17 ஆம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
X

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மாதம்தோறும் வெள்ளிக்கிழமை தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்திலும் முகாம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தனியார்துறை நிறுவனங்களும் - தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. அதன்படி, மார்ச் மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது வருகின்ற 17 ஆம் தேதி வெள்ளிகிழமை நடைபெற உள்ளது.

எனவே, தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்துகொள்ளலாம். இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு மேனேஜர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், அக்கண்டண்ட், கேஷியர், டைப்பிஸ்ட், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டெண்ட் போன்றபணிகளுக்கு தேர்வுசெய்ய உள்ளனர். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள், 12-ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு, ஐடிஐ பயிற்சி, சிவில் டிராட்ஸ்மேன், இன்பர்மேஷன், கம்யூனிகேஷன், மெஷினிஸ்ட், மெக்கானிக், ஆட்டோ பாடி ரிப்பேர், கப்யூட்டரில் ஜாவா, டேலி போன்ற பயிற்சி பெற்றோர் மற்றும் அனைத்துவித கல்வித் தகுதி உள்ள ஆண்களும், பெண்களும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

மேலும், வேலைவாய்ப்பு உதவி தொகை திட்டத்திற்கான படிவம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் இலவச திறன் பயிற்சிகளில் சேர பதிவும் ஆலோசனையும் முகாமில் வழங்கப்படும். இம்முகாமில் பங்குபெறும் வேலையளிப்போரும், வேலைநாடுநரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இம்முகாமானது முற்றிலும் இலவசமானது. மேலும், இவ்வேலைவாய்ப்பு முகாமின் மூலம் பணிவாய்ப்பு பெற்றவரது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது..

மேற்கண்ட பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் அனைவரும் வருகின்ற 17ம் தேதி காலை 10.30 மணிக்கு நாமக்கல், மோகனூர் ரோட்டில் உள்ள மாவட்டவேலைவாய்ப்பு மையத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் ஸ்ரேயா சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 15 March 2023 4:45 AM GMT

Related News