Begin typing your search above and press return to search.
நாமக்கல் வக்கீல்கள் சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்தல்
நாமக்கல் வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தலில் தலைவராக பிரபாகரன், செயலாளராக நந்தகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
HIGHLIGHTS
நாமக்கல் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. 220 வக்கீல்கள் தேர்தலில் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிவடைந்து, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், வக்கீல்கள் சங்க தலைவராக பிரபாகரன் தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக நந்தகுமார், பொருளாளராக யுவராஜா, இணை செயலாளராக ராஜகோபால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு வக்கீல்கள் வாழ்த்து தெரிவித்தனர்.