/* */

கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச பயிற்சி

Namakkal news- கோடைக்கால பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து நாமக்கல்லில் வரும் 30ம் தேதி இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

HIGHLIGHTS

கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு  முறைகள்: 30ம் தேதி இலவச பயிற்சி
X

Namakkal news-கோடைக்கால பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து  இலவச பயிற்சி வகுப்பு (மாதிரி படம்)

Namakkal news, Namakkal news today-கோடைக்கால பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து நாமக்கல்லில் வரும் 30ம் தேதி இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில், அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில், வருகிற 30ம் தேதி காலை 10 மணிக்கு, கோடைக்கால பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெறுகிறது. இப்பயிற்சியில் கோடைக்காலத்தில் பயிரைத் தாக்கும் பூச்சிகளையும், நோய்களையும், இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும், வளர்ச்சியூக்கிகள் பற்றியும், குறைந்த செலவில் அதிகம் லாபம் பெற தேவையான தொழில் நுட்பங்கள் குறித்தும் விரிவாக பயிற்சி அளிக்கப்படும்.

இதில் விவசாயிகள், விவசாயம் கலந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், தொழில் முனைவோர் மற்றும் ஆர்வமுள் அனைவரும் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் 04286 266345, 266650, 7010580683, 9597746373, 9943008802 என்கிற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம், என வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Updated On: 24 April 2024 10:15 AM GMT

Related News