/* */

ராசிபுரம் பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

நாமக்கல் லோக்சபா தொதிக்கு உட்பட்ட, ராசிபுரம் நகராட்சியில், 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம் என்ற தலைப்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

HIGHLIGHTS

ராசிபுரம் பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
X

ராசிபுரம் நகராட்சியில், 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்பணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் உமா கலந்துகொண்டார்.

நாமக்கல் லோக்சபா தொதிக்கு உட்பட்ட, ராசிபுரம் நகராட்சியில், 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம் என்ற தலைப்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து. நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உடைய இந்திய குடிமக்களாகிய நாங்கள் எந்த ஒரு ஜாதி, மதம், இனம், வகுப்பு மற்றும் மொழி பாகுபாட்டிற்கும் ஆட்படாமல் எதிர்வரும் மக்களவை பொது தேர்தலில் வாக்களிப்பேன் எனும் வாக்களார் உறுதிமொழி ஏற்று கையெழுத்திட்டனர்.

தொடர்ந்து, தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேர்தலில் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்த வாசகங்கள் பொறிக்கப்பட்ட துண்டுபிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகளுக்கு வழங்கினார். தேர்தல் நாள் ஏப்ரல் 19 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரேசன் கடைகளில் பொது விநியோக பொருட்களின் மீது தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணியை ஆட்சியர் துவக்கி வைத்தார்.

மேலும், 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிப்போம் என்பது குறித்த விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, ராசிபுரம் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல் தலைமுறை வாக்காளார்களுக்கு தேர்தலில் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் செல்வராசு, கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் அருளரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 19 March 2024 9:00 AM GMT

Related News