விஷ வண்டு கடித்ததால் பெண்கள் 3 பேர் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி
எலச்சிபாளையம் அருகே விஷ வண்டு கடித்ததில் 3 பெண்கள் மயக்கமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் ஒன்றியம், மருக்கலாம்பட்டி ஊராட்சியில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்பணியில், ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட மொத்தம் 30 பேர் நேற்று வேல செய்து கொண்டிருந்தனர் பணி செய்தனர்.
சீமை கருவேல மரங்களை வெட்டும் போதும், அதில் கூடு கட்டிருந்த விஷத்தன்மை கொண்ட கதண்டு வண்டு கூட்டமாக பறந்தது. அப்போது, பெண்களை துரத்தி துரத்தி கொட்டியது. அதில், வேலகவுண்டம்பட்டியை சேர்ந்த பாப்பாத்தி (41), ஸ்ரீரங்கம்மாள் (66), மருக்கலாம்பட்டி சுமதி (52) ஆகிய 3 பேரை கடுமையாக கடித்ததால் அவர்கள் மயக்கமடைந்தனர்.
அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கதண்டு வண்டு கடித்ததும், அதன் விஷம் ரத்தத்தில் கலந்து, பாதிக்கப்பட்டர்களுக்கு மயக்கம், வாந்தி போன்ற உபாதைகளும், ரத்த அழுத்தம் படிப்படியாக குறைந்து, பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கும், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.