Begin typing your search above and press return to search.
காளப்பநாய்க்கன்பட்டி, கொல்லிமலை பகுதியில் 22ம் தேதி மின் நிறுத்தம்
காளப்பநாய்க்கன்பட்டி, கொல்லிமலை பகுதியில் 22ம் தேதி மின்சாரத்தடை என நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்தார்.
HIGHLIGHTS
இதுகுறித்து, நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டம், காளப்பநாய்க்கன்பட்டி துணை மின் நிலையத்தில் 22ம் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும். இதனால், காளப்பநாய்க்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.