/* */

காளப்பநாய்க்கன்பட்டி, கொல்லிமலை பகுதியில் 22ம் தேதி மின் நிறுத்தம்

காளப்பநாய்க்கன்பட்டி, கொல்லிமலை பகுதியில் 22ம் தேதி மின்சாரத்தடை என நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

காளப்பநாய்க்கன்பட்டி, கொல்லிமலை பகுதியில் 22ம் தேதி மின் நிறுத்தம்
X

பைல் படம்.

இதுகுறித்து, நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம், காளப்பநாய்க்கன்பட்டி துணை மின் நிலையத்தில் 22ம் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும். இதனால், காளப்பநாய்க்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 20 Sep 2022 10:45 AM GMT

Related News