/* */

குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

குமாரபாளையம் பகுதியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
X

குமாரபாளையத்தில்,  நடராஜா நகர் நகராட்சி தொடக்கப்பள்ளியில்,  இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

குமாரபாளையம் பகுதியில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் நடராஜா நகர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தலைமை ஆசிரியர் சிவலிங்கம் தலைமை வகித்தார். கொரோனா காலத்தில் இழந்த கல்வியை மீட்டெடுக்க குழந்தைகளுக்கு பள்ளி முடிந்த பின் கல்வி கற்பிக்க தமிழக அரசால் கொண்டு வந்துள்ள திட்டம் இல்லம் தேடி கல்வி திட்டம் ஆகும்.

இத்திட்டத்தின் செயல்பாடுகளை நாட்டுப்புற கலைஞர் சத்யபாமாவின், தெம்மாங்கு தென்றல் கலைக்குழுவின் சார்பில், தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பி.டி.ஏ. தலைவர் ராஜேந்திரன், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விடியல் பிரகாஷ், மேலாண்மைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜோதி, ஆசிரியர் பயிற்றுனர்கள் கனகராஜ், குணசேகரன், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். விழிப்புணர்வு நிகழ்ச்சி புத்தர் வீதி, சின்னப்பநாயக்கன்பாளையம், பாரதி நகர், சந்தைபேட்டை, பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, காவேரி நகர் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது.

Updated On: 17 Dec 2021 2:00 PM GMT

Related News