/* */

குமாரபாளையத்தில் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம்

குமாரபாளையத்தில் அரசு கல்லூரி சார்பாக நடைபெற்று வரும் நாட்டு நலப்ணி திட்ட முகாமில் நேற்று சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம்
X

குமாரபாளையத்தில் நடைபெற்று வரும் நாட்டு நலப்பணி திட்ட முகாமில் நேற்று சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட முகாம் சடையம்பாளையத்தில் துவக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமை வகித்தார். 7 நாட்கள் நடைபெறவுள்ள இந்த முகாமில் கிராமத்தை தூய்மை செய்தல், மரக்கன்றுகள் நடுதல், இல்லம் தோறும் கல்வி திட்டம் ஆகியன நடைபெற்றது.

நேற்று சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம் நடைபெற்றது. இதில் ஜோதி உயர் தொழில் நுட்ப பரிசோதனை மையத்தில் இருந்து மருத்துவக்குழுவினர் வந்து பொதுமக்களுக்கு சர்க்கரை நோய் கண்டறியும் பணியை செய்தனர். பல் பாதுகாப்பு குறித்த முகாம், தீ விபத்தை தடுக்கும் வழிமுறைகள், நூலகத்தை பயன்படுத்துதல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு ஆகியன நடைபெறவுள்ளன.

இந்த முகாமில் 50 மாணாக்கர்கள் பங்கேற்றனர். கல்லூரி வணிகவியல் துறை தலைவர் ரகுபதி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஞானதீபன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 10 Jan 2022 5:00 PM GMT

Related News