/* */

நாகையில் போலீசார் மிரட்டியதாக கூறி பெண் தற்கொலை முயற்சி

நாகையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உறவினர்கள் மத்தியில் தரக்குறைவாக பேசியதால் விஷம் குடித்து பெண் தற்கொலைக்கு முயற்சித்தார்.

HIGHLIGHTS

நாகையில் போலீசார் மிரட்டியதாக கூறி  பெண் தற்கொலை முயற்சி
X

விஷம் அருந்திய ரேவதி நாகை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாகப்பட்டினம் மறைமலை நகரை சேர்ந்தவர் பிளாக்கி என்கிற முகமது மெய்தீன். இவர் மீது சில வழக்குகள் உள்ளன. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் கத்தியுடன் நின்றதாக வெளிப்பாளையம் போலீசார் முகம்மது மெய்தீனை கைது செய்தனர். இந்த நிலையில் முகம்மது மெய்தீன் வீட்டில் அவரது மனைவி ரேவதி உறவினர்களுடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் உறவினர்கள் மத்தியில் தரக்குறைவாக பேசியுள்ளார். மேலும் ரேவதி மீது வழக்குப் போடுவதாக மிரட்டியுள்ளார். இதனை தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் ரேவதியை வீட்டை காலி செய்யுமாறு கூறினாராம்.

இதனால் மனம் உடைந்த ரேவதி விஷம் அருந்தியுள்ளார். அருகில் இருந்தவர்கள் ரேவதியை மீட்டு நாகப்பட்டினம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் இன்ஸ்பெக்டர் மிரட்டியதால் பெண் தற்கொலைக்கு முயற்சித்துள்ளது நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Updated On: 3 Oct 2021 2:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  2. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  3. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  5. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  6. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  8. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  10. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...