/* */

தடுப்பூசி தட்டுபாட்டை போக்க விரைவில் நடவடிக்கை: அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

கோவேக்ஸின் இரண்டாம் டோஸ் தட்டுப்பாட்டை போக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகையில் அமைச்சர் மெய்யநாதன் பேட்டி.

HIGHLIGHTS

நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 80 லட்சம் ரூபாய் மதிப்பில் வானவில் அறக்கட்டளை சார்பில் உருவாக்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டும் நிலையத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று திறந்து வைத்தார். 1 நிமிடத்தில் 333 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன்கொண்ட நிலையத்தை கொரோனா மற்றும் பிற நோயாளிகளும் பயன்பெறும் வகையில் துவங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில் ; நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளதாக கூறிய அமைச்சர், மூன்றாம் அலை வந்தாலும் சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கூறினார். மேலும், நாகை மாவட்டத்தில் கோவேக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், முதல்வரிடம் பேசி சில தினங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு போக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் விஸ்வநாதன், திமுக மாவட்ட பொறுப்பாளர் கௌதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Updated On: 13 July 2021 7:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  2. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  4. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  5. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  7. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  8. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  9. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  10. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு