Begin typing your search above and press return to search.
நாகப்பட்டினத்தில் ஒரே நாளில் 20 பேர் தொற்றால் உயிரிழப்பு பொதுமக்கள் அச்சம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒருநோளில் கொரோனா சிகிச்சை பலன் இன்றி 20 பேர் இறந்தனர். பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
HIGHLIGHTS
உலகை அச்சுறுத்தி வரும் கொரனா நோய் தொற்று தமிழகத்தில் தினந்தோறும் அதிகரித்து வரும் நிலையில் நாகை மாவட்டத்தில் இதுவரை 24 ஆயிரத்து 711 பேர் கொரோனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே நாளில் 20 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து இறப்பின் எண்ணிக்கை 297 ஆக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு தினங்களாக 3 பேர் 5 பேர் என உயிரிழந்து வந்த நிலையில் தற்போது ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.