/* */

சி.பி.சி.எல். நிலம் எடுப்பதை கண்டித்து நாகையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தும் சி.பி.சி.எல். நிர்வாகத்தை கண்டித்து நாகையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

சி.பி.சி.எல். நிலம் எடுப்பதை கண்டித்து நாகையில்  விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

சி.பி.சி.எல். நிறுவனம் விளை நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல், நாகை மாவட்டம் நாகூர், பனங்குடி, முட்டம் ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது. இதன் விரிவாக்கத்திற்காக, பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம், உத்தமசோழபுரம், முட்டம் ஆகிய ஊராட்சிகளில் 622 ஏக்கர் நில எடுப்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதி விவசாயிகள், இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பனங்குடி கோபுராஜபுரம் ஆகிய நான்கு ஊராட்சி விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தும் சி.பி.சி.எல். நிர்வாகத்தையும் மற்றும் அதற்குத் துணைபோகும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவித்த பகுதியில் உள்ள விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்றும் இதனை தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தினர்.


Updated On: 6 Oct 2021 8:26 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  3. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  4. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  6. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  7. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  8. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  10. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...