/* */

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அனுமதியின்றி மண் அள்ளிய 4 பேர் கைது : 2 டிராக்டர், 1 ஜே.சி.பி பறிமுதல்

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அனுமதியின்றி மண் அள்ளிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். 2 டிராக்டர், 1 ஜே.சி.பி. இயந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே பூலாங்குடி கிராமம் மஞ்சங்கன்னி வாய்க்காலில் அனுமதியின்றி மண் அள்ளப்படுவதாக, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இது தொடர்பாக கீழ்வேளுர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்ப்பட்டு, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது மஞ்சங்கன்னி வாய்க்காவில் 2 டிராக்டரில் 4 பேர் களிம்பு மண் ஏற்றி கொண்டிருந்தது தெரியவந்தது.

அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, குருக்கத்தி, அய்யப்பன்,பூலாங்குடியைச் சேர்ந்த கந்தகுமார் குருமணங்குடி மாரிமுத்து கீழ்வேளூர், வெள்ளந்திடல் ராஜா என்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேர் மீது கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு. செய்து அவர்களை கைது செய்தனர். மண் அள்ள பயன்படுத்திய 2 டிராக்டர்கள், 1 ஜே.சி.பி. இயந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 2 July 2021 2:10 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  3. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  7. நாமக்கல்
    கோர்ட் உத்தரவின்படி இழப்பீடு செலுத்ததாத கான்ட்ராக்டர் நுகர்வோர்...
  8. லைஃப்ஸ்டைல்
    சொத்து இல்லைன்னாலும் கெத்து இருக்கணும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடைக் காலத்துல ஈஸியா எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?
  10. தொண்டாமுத்தூர்
    நகை பறிப்பு, திருட்டு கொள்ளை சம்பவங்கள் கோவையில் அதிகரித்துள்ளது :...