/* */

முன் ஜாமீன் மனு : முன்னாள் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 6 பேரை கைது செய்ய இடைக்கால தடை

நீதிமன்றத்தின் முன்பாகவோ, நீதிமன்ற வளாகத்திலோ போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு

HIGHLIGHTS

முன் ஜாமீன் மனு : முன்னாள் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 6 பேரை கைது செய்ய இடைக்கால தடை
X

முன்ஜாமீன் கோரி மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி உள்ளிட்ட 6 பேர் தொடர்ந்த வழக்கில் டிச. 23 வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

திண்டுக்கல்லில், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தனியாா் கல்லூரி தாளாளா் ஜோதிமுருகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைக் கண்டித்தும், ஜாமீனை ரத்து செய்ய வலியுறுத்தியும் திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஜனநாயக மாதா் சங்கத்தினா், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில் கடந்த 6ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, வழக்கறிஞர் தேவேந்திரன் என்பவருக்கும், மாதா் சங்கத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனிடையே, தன்னை தாக்க முயன்றதாக தேவேந்திரன் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் கே.பாலபாரதி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் ராணி, வனஜா, ஆண்டாள் அம்மாள், ஜோதிபாசு, அரபு முகமது மற்றும் அடையாளம் தெரியாத 20 போ் உள்பட மொத்தம் 27 போ் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி மற்றும் ஜானகி உள்ளிட்ட 6 பேர் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன், நீதிமன்றத்தின் முன்பாகவோ, நீதிமன்ற வளாகத்திலோ இதுபோல் போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி மற்றும் முன் ஜாமின் கோரியோர் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை 6 பேரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

Updated On: 15 Dec 2021 11:30 PM GMT

Related News