/* */

தசரா விழாவை முன்னிட்டு தேன்கனிக்கோட்டை அருகே கிராம தேவதைகளின் உற்சவ விழா

கிராம தேவதைகளின் உற்சவ விழாவில் தேங்காய்களை கட்டிவிட்டு அதை அம்பு விட்டு உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

HIGHLIGHTS

தசரா விழாவை முன்னிட்டு தேன்கனிக்கோட்டை அருகே கிராம தேவதைகளின் உற்சவ விழா
X

கிராம தேவதைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இருதுகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மணியம்பாடி கிராமத்தில் ஆண்டு தோறும் தசரா திருவிழாவை முன்னிட்டு கிராம தேவதைகளின் உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தசரா விழா முன்னிட்டு கிராம தேவதைகளின் உற்சவம் மற்றும் வீதி உலா நடைபெற்றது.

மணியம்பாடி மெலூர் ஒட்டர்பாளையம் ஆகிய கிராம மக்கள் சார்பில் விவசாயம் செழிக்கவும், மக்கள் நொடியின்றி வாழவும் கிராம தேவதைகளுக்கு திருவிழா நடத் தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு தசரா திருவிழாவை முன்னிட்டு மணியம்பாடியில் உள்ள கிராம தேவதைகளான பட்டாளம்மன், மாரியம்மன், மெலூர் கிராமத்தில் சிக்கம்மா, தொட்டம்மா, பசுவேஸ்வர சாமி, வீரபத்திர சாமி, பட்டாளம்மன், ஓம்காளியம்மன், மாரியம்மன், வெங்கடராம சுவாமி, ஒட்டர்பாளையம் கிராமத்தில் உள்ள திம்மராய சாமி, சென்றாய சாமி, வீரபத்திர சாமி உட்பட பல்வேறு கிராம தேவதைகளை அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து மேள, தாளங்கள் முழங்க அலங்கரிக்கபட்ட எருதுகளுடன் ஊர்வலமாக தோள்களில் சுமந்தவாறு புறப்பட்ட பக்தர்கள் மணியம்பாடி கிராமத்திற்கு வந்தடைந்தனர்.

அப்பகுதியில் உள்ள கோவில் வளாகத்தில் அனைத்து கிராம தேவதை களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பக்தர்கள் பாரம்பரிய நடமாடினர். இதைத்தொடர்ந்து மரக்கிளைகள் கொண்டு வந்து அந்த மரங்களின் கிளைகளின் தேங்காய்களை கட்டிவிட்டு அதை அம்பு விட்டு உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்தினர் இந்த விழாவை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொன்டனர்.

Updated On: 26 Oct 2023 5:19 AM GMT

Related News

Latest News

  1. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  3. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  4. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  5. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  6. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  7. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  9. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  10. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை