/* */

கிருஷ்ணகிரியில் தற்காலிக மருத்துவர்கள் மீண்டும் பணி வழங்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

கிருஷ்ணகிரியில் கொரோனா கால தற்காலிக மருத்துவர்கள் மீண்டும் பணி வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் இடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரியில் தற்காலிக மருத்துவர்கள் மீண்டும் பணி வழங்க  மாவட்ட ஆட்சியரிடம் மனு
X

கிருஷ்ணகிரியில் கொரோனா கால தற்காலிக மருத்துவர்கள் மீண்டும் பணி வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் இடம் மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கொரோனா பேரிடர் சமயத்தில் பணியாற்றிய தற்காலிக மருத்துவர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் எனக் கோரி மனு அளித்தனர்.

அந்த மனுவில் கொரோனா பேரிடர் சமயத்தில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்காலிகமாக 52 மருத்துவர்கள் அரசால் நியமிக்கப்பட்டோம். தற்போது கொரோனா தொற்று குறைந்த காரணத்தால் 52 மருத்துவர்களும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

பணி இல்லாத காரணத்தால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம் ஆகவே எங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி சுகாதார துறை அமைச்சரைச் சந்தித்து மருத்துவக் குழு பேச்சு வார்த்தை நடத்தியது அப்போது மீண்டும் வழங்க முதல்வர் அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு உள்ளார் எனவும் விரைவில் பணி உத்தரவு வரும் எனவும் தெரிவித்தார்.

ஆனால் இது நாள் வரை எங்களுக்குப் பணி வழங்கப்படவில்லை. ஆகவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக எங்கள் மனுவைப் பரிசீலனை செய்து எங்களுக்குப் பணி வழங்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.

Updated On: 27 Dec 2021 12:01 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்