/* */

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 57 பேர் பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 57 பேர் பாதிப்பு
X

இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா வைரஸ் சற்று குறைந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா 2வது அலை மிக வேகமாக பரவத் தொடங்கியது. இளம் வயதினர், வயதானவர்கள் என ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகமாக இருந்து வருகிறது.

தற்போது, கொரோனா 2,வது அலை தற்போது படிப்படியாக கட்டுக்குள் வருகிறது. எனினும், கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதில் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனஹள்ளி அருகே தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். கடந்த 13ம் தேதி வரையில் மாவட்டம் முழுவதும் 42 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 12 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 57 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 16 Jun 2021 4:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  3. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  5. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  6. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  7. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  8. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  9. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  10. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...