கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 57 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா வைரஸ் சற்று குறைந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா 2வது அலை மிக வேகமாக பரவத் தொடங்கியது. இளம் வயதினர், வயதானவர்கள் என ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகமாக இருந்து வருகிறது.
தற்போது, கொரோனா 2,வது அலை தற்போது படிப்படியாக கட்டுக்குள் வருகிறது. எனினும், கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதில் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனஹள்ளி அருகே தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். கடந்த 13ம் தேதி வரையில் மாவட்டம் முழுவதும் 42 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 12 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 57 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.