தேர்தல் பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பங்கள் வரவேற்பு
சட்டமன்ற பொதுத் தேர்தலில் சிறப்பு பாதுகாப்பு அலுவலராக பணிபுரிய முன்னாள் படைவீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
HIGHLIGHTS
சட்டமன்ற பொதுத் தேர்தலில் சிறப்பு பாதுகாப்பு அலுவலராக பணிபுரிய முன்னாள் படைவீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள சட்டமன்ற பொது தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள், சிறப்பு பாதுகாப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்படவுள்ளனர்.
சிறப்பு பாதுகாப்பு அலுவலர்களாக பணிபுரிய விருப்பமுள்ள தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களின் விருப்பத்தினை தங்களது அடையாள அட்டையுடன், கிருஷ்ணகிரியில் உள்ள முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநரை நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண். 04343&236134 மற்றும் காவல்துறை தொடர்பு எண்களான 9498179501 மற்றும் 9498102006 என்ற எண்களிலோ தொடர்பு கொண்டு தங்களது விவரங்களை தெரிவிக்கலாம்.
எனவே, முன்னாள் படைவீரர்கள் பெருமளவில் பங்கேற்று, சட்டமன்ற பொதுத்தேர்தல் பாதுகாப்பு பணிக்கு தங்களது முழு ஒத்துழைப்பினை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.