/* */

கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா பெருந்தொற்று நிலவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகினர், 195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா பெருந்தொற்று நிலவரம்
X

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 406 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி, 38 வயது பெண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர். அதே போல கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 77 வயது முதியவர் கொரோனா பாதிப்புடன் வேலூர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 272 ஆக உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் 38 ஆயிரத்து 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 35 ஆயிரத்து 918 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். தற்போது 1832 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Updated On: 18 Jun 2021 2:12 AM GMT

Related News