/* */

கிருஷ்ணகிரி அருகே பெரியார் சிலைக்கு தீ வைப்பு

கிருஷ்ணகிரி அருகே பெரியார் சிலைக்கு தீ வைப்பு
X

கிருஷ்ணகிரி அருகே பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததை கண்டித்து பொதுமக்கள் மற்றும் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கிருஷ்ணகிரி குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் கத்தாளமேடு என்ற பகுதியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் இன்று அதிகாலை தீ வைத்துள்ளனர். சிலையின் மீது டயரை போட்டு அதற்கு தீ வைத்துள்ளனர். இதுகுறித்து அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் திராவிடர் கழகத்தினர் சிலை முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெரியார் சிலையை அவமதித்து தீ வைத்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மகாராஜகடை இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் உடனடியாக பெரியார் சிலை மீது தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தார். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாக உறுதியளித்துள்ளார்.

Updated On: 7 March 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்