/* */

31 வருட போராட்டம் 3 நாளில் தீர்வு : ஆட்சியரின் அதிரடி

பேருந்து சேவை கோரி 30 ஆண்டு காலம் போராடிய மக்களுக்கு மூன்றே நாட்களில் தீர்வு கண்டு பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்த மாவட்ட ஆட்சியர்.

HIGHLIGHTS

கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது கருப்பம்பாளையம் ஊராட்சி. விசாயத்தையே நம்பி உள்ள இந்த ஊராட்சியில் வசிக்கும் மக்கள், அவசரத் தேவைகளுக்கும், அத்தியாவசிய பணிகளுக்கும் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் கரூர் நகருக்கு வந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

இந்நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் கடந்த 15 ம் தேதி தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கருப்பம்பாளையம் ஊராட்சி மக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு கரூர் நகருக்கு சென்று வர பேருந்து வசதி இல்லை என்றும், இப்பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை கரூருக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு கூட வசதி இல்லாததால், ஆயத்த ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள், கொசுவலை உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு தினந்தோறும் பணிக்குச் சென்று வருவதாகவும் கடந்த 31 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை கேட்ட மாவட்ட ஆட்சியர் வெகுவிரைவில் கருப்பம்பாளையம் பகுதிக்கு பேருந்து வசதி செய்தி தரப்படும் என்று உறுதியளித்தார். தொடர்ந்து போக்குவரத்துக்கழக பொது மேலாளரிடம் கருப்பம்பாளையம் ஊராட்சிக்கு நகரப்பேருந்து சென்று வருவதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து, போக்குவரத்து துறை அலுவலர்கள் கருப்பம்பாளையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு பேருந்து வசதி ஏற்படுத்துவது குறித்து ஆய்வு செய்தனர்.

பின்னர், தினந்தோறும் காலை 9.25 மணிக்கு அப்பிப்பாளைம் முதல் கரூர் வரை உள்ள பேருந்து சேவையை கருப்பம்பாளையம் வரை இயக்கவும், மாலை 6.20 மணிக்கு கரூர் முதல் கருப்பம்பாளையம் வரை என ஒரு நாளைக்கு இரண்டு முறை கருப்பம்பாளையத்திற்கு வரும் வகையில் நகரப்பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 19 ம் தேதி முதல் கருப்பம்பாளையம் வரை பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இந்த பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு பேருந்து சேவையினை துவக்கி வைத்தார்.

30 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து ஓய்ந்துபோன பொதுமக்கள், மூன்றே நாட்களில் நடவடிக்கை எடுத்து பேருந்து வசதி செய்து கொடுத்த கரூர் மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

Updated On: 22 July 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்