Begin typing your search above and press return to search.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கரூரில் விழிப்புணர்வு பேரணி
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கரூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
HIGHLIGHTS
கரூர் காளியப்பனூர் பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவ - மாணவிகள் மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் இணைந்து, சர்வதேச மகளிர் தினம் வரும் 8-ஆம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, அது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில், பெண் குழந்தைகள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும், பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பியவாறு, மாணவ- மாணவிகள் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணி ஆனது காளியப்பனூர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வழியாகச் சென்று நிறைவடைந்தது.