கரூர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக எம்.பி., தம்பிதுரை நியமனம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், கரூர் மாவட்ட பொறுப்பாளராக எம்.பி., தம்பிதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.
HIGHLIGHTS
அதிமுக., கொள்கைபரப்பு செயலாளரும், முன்னாள் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை, கடந்த லோக்சபா தேர்தலில் கரூர் தொகுதியில், போட்டியிட்டு தோற்றார். அதன் பிறகு, கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, கரூர் மாவட்டத்தில், அதிமுக., வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அதிமுக., ஆட்சியை இழந்த நிலையில் கடந்த எட்டு மாதமாக கரூர் மாவட்ட நிகழ்ச்சிகளில், பங்கேற்பதை தம்பிதுரை தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், அதிமுக., சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதில், கரூர் மாவட்ட பொறுப்பாளராக எம்.பி., தம்பிதுரை, மாநில அமைப்பு செயலாளர் சின்னசாமி, மாவட்ட செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கரூர் மாநகராட்சி, மூன்று நகராட்சிகள், எட்டு டவுன் பஞ்சாயத்துக்களில் போட்டியிடும், அதிமுக., வேட்பாளர்களை ஆதரித்து, எம்.பி., தம்பிதுரை பிரசாரம் செய்ய இன்று அல்லது நாளை வர உள்ளார்.