/* */

சிறுமிக்கு பாலியல் தொல்லை : 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பு.

HIGHLIGHTS

சிறுமிக்கு  பாலியல் தொல்லை : 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு
X

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் 20 ஆண்டு சிறைதண்டனை பெற்ற சரவணன்.

கரூர் மாவட்டம் உப்பிடமங்களம் பகுதியில் கடந்த 2019 ம் ஆண்டு பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய 3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த சரவணன் ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். இச்சம்பவம் குறித்து வெள்ளியணை காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். இது தொடர்பாக சரவணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனை விசாரித்த நீதிபதி நசீமா பானு, குற்றவாளி சரவணனுக்கு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 20 ஆண்டு சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்ச ரூபாய் நிவாரண தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

Updated On: 20 Sep 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  2. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  5. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  6. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  7. வீடியோ
    🔴LIVE : Annamalai-யை படம் பார்க்க அழைத்தேன் | Ameer பகீர் தகவல் |...
  8. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  9. குமாரபாளையம்
    நகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை!
  10. ஈரோடு
    ஈரோட்டில் சுசி ஈமு நிறுவன அசையா சொத்துகள் ஏலம் ரத்து!