கரூர் மாவட்டத்தில் சமரச மையத்தின் மூலம் இரண்டு வழக்குகளுக்கு தீர்வு
கரூர் மாவட்டத்தில் சமரச மையத்தின் மூலம் இரண்டு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
HIGHLIGHTS
தமிழ்நாடு மாநில சமரச மையத்தின் அறிவுறுத்தலின்படி 08.4.2024 முதல் 12.4.2024 வரை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் வட்ட சமரச மையத்தில் சமரச நாள் வாரமானது தொடர்ந்து நடைபெற உள்ளது. அதேபோல் கரூர் மாவட்ட சமரச மையத்தின் தலைவர் சண்முகசுந்தரம் அறிவுறுத்தலின் படியும் மற்றும் மாவட்ட சமரச மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மு.பாக்கியம் வழிகாட்டுதலின்படியும் கரூர் சமரச மையத்தின் சார்பாக பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடத்தப்பட்டு, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இதனை வழக்கறிஞர் பாலகுமார் வழங்கினார். மேலும் கரூர் மாவட்ட சமரச மையத்தின் சார்பாக இன்று இரண்டு வழக்குகளுக்கு சமரசம் செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும், வழக்காடிகளும் கரூர் மாவட்ட சமரச மையத்தை பயன்படுத்திக் கொண்டு தங்களுக்குள் ஏற்படும் சச்சரவுகளை சுமூகமான முறையில் தீர்த்துக் கொள்ளும்படி முதன்மை மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இந்த அரிய வாய்ப்பினை சம்பந்தப்பட்ட வழக்காடிகள் பயன்படுத்தி பயன் அடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.