கரூர் மாநகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்- மக்கள் அவதி
கரூர் மாநகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
HIGHLIGHTS
தமிழக அளவில் மைய மாவட்டம், தொழில்கள் நிறைந்த மாவட்டம், கொசுவலை, டெக்ஸ்டைல் ஆகிய தொழில்களில் முன்னோடி மாவட்டம் என்றெல்லாம் பெருமை வாய்ந்த கரூர். காலங்கள் மாறி, பல வியக்கத்தகு மாற்றங்கள் வந்தாலும், அவையெல்லாம் இன்னும் கரூர் பக்கம் வரவில்லை போலிருக்கிறது.
கரூரில் இன்றும் அந்த பழைய ரோல் மாடல் தான் நடந்து வருகின்றது. டிராபிக் ஜாம் என்றால் அதில் முன்னணியில் கரூர் உள்ளது. கரூர் மாநகராட்சியில் திண்ணப்பா கார்னர் பகுதியில் மாலை நேரங்களில் செங்குந்தபுரத்தில் இருந்து வரும் இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் பழைய சேலம் பைபாஸ் சாலையில் இணைவதினால் அங்கு அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
இதனை கரூர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உடனடி நடவடிக்கை எடுத்து அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஒட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ஒட்டிகளை சிரமம் இல்லாமல் அனுப்பி வைக்க உதவ வேண்டும் என்று, பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.