/* */

புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி கண்டனம்

தவறான செய்திகளை ஒளிபரப்பியதாக புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி கண்டனம்
X

கரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கை.

கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் சின்னசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ஜோதிமணிக்கு கரூர் மாவட்ட காங்கிரஸ் கண்டனம் என்று புதிய தலைமுறை ஊடகத்தில் வந்துள்ள செய்தியை நாங்கள் மறுக்கின்றோம், எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எளிய பின்னணியில் இருந்து அரசியலுக்கு வந்து வலிமையாகவும், அர்ப்பணிப்போடும் மக்களுக்கு பணியாற்றுபவர் ஆவார். எளிமையும், நேர்மையும் மிகுந்த ஒரு போராளி. காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் கரூர் தொகுதி மக்களின் அன்பிற்குரியவர். அவர் மீது இதுபோன்று கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பெயரால் அவதூறு பரப்புவது ஏற்புடையது அல்ல. ஊடக அறமும் அல்ல. இது போன்ற செய்திகளை வெளியிடும் போது பொறுப்புடனும், உண்மைத்தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி கமிட்டியின் தலைவர் என்கின்ற முறையில் கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Updated On: 31 Jan 2022 12:49 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்