/* */

கரூரில் பட்டா மாறுதல், பிழை திருத்த சிறப்பு முகாம்: ஆட்சியர் பங்கேற்பு

கரூரில் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் பட்டா தொடர்பான பிரச்னைகளை தீர்க்க சிறப்பு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கரூரில் பட்டா மாறுதல், பிழை திருத்த சிறப்பு முகாம்: ஆட்சியர் பங்கேற்பு
X

பட்டா மாறுதல்,  திருத்தம் தொடர்பான சிறப்பு முகாமில் ஆட்சியர் பிரபு சங்கர் சான்றிதழை வழங்கினார்.

தமிழகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் பட்டா மாறுதல், பிழை திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதற்காக ஒவ்வொரு ஊராட்சியிலும் சிறப்பு முகாம்களை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில், கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சியில் இன்று முதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.

காதப்பாறை ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் தங்களது பட்டா தொடர்பான பிரச்சனைகள் குறித்து மனு அளித்து உடனடியாக பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. முகாமில், மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 51 பேர் தங்களது பட்டாவில் உள்ள பெயர் மாற்றம், பிழை திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க கோரி மனு அளித்தனர்.

இவர்களில், 21 பேரின் பட்டா தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரிடையாக வழங்கினார்.

Updated On: 27 Oct 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்