/* */

கரூர் வாரச் சந்தையில் குவிந்த பொதுமக்கள் கூட்டம்

பலரும் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் குவிந்ததால் கொரனோ தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது.

HIGHLIGHTS

கரூர் வாரச் சந்தையில் குவிந்த பொதுமக்கள் கூட்டம்
X

காய்கறி வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.

கரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 900 தாண்டிய நிலையில் மாநகராட்சி சார்பில் பொது மக்கள் கூடுவதை தவிர்க்க தற்காலிக சந்தைகளை திறக்க முடிவு செய்யப்பட்டு திருவள்ளுவர் விளையாட்டு மைதானம், காந்திகிராமம் மைதானம் என பல இடங்களில் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு பொதுமக்கள் அதிகளவில் செல்லாத நிலை இருந்து வருகிறது.

இந்தநிலையில் கரூர் நகரில் கச்சேரி பிள்ளையார் கோவில் பகுதியில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை கூடுவது வழக்கம். தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக வாரச் சந்தைகள் கூட கூடாது என மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், வியாபாரிகள் அப்பகுதியில் ஒன்று சேர்ந்து சந்தையை கூட்டியுள்ளனர். இதனால் அதிகாலை முதல் வியாபாரிகள் தரைக் கடைகளை அமைத்ததால் பொதுமக்கள் வரத் துவங்கினர்.

மேலும், நாளை ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் பலரும் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் வீடுகளுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். சுகாதாரத்துறை, காவல் துறை அதிகாரிகள் அப்பகுதிகளில் இருந்து கட்டுப்படுத்த தவறியதால் வழக்கத்தை விட அதிகளவிலான பொதுமக்கள் ஒன்று திரண்டு காய்களை வாங்கிச் செல்கின்றனர். கொரோனா பரவல் கால கட்டத்தில் இது போன்று அதிகளவில் ஒரே இடத்தில் கூடினால் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 22 Jan 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு