/* */

கரூரில் நீதிமன்ற உத்தரவை மீறி நடைபெற்ற சேவல் சண்டை: போலீசார் விசாரணை

கரூரில் நீதிமன்ற உத்தரவை மீறி சேவல் சண்டை நடத்திய கும்பலில் ஒருவரை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

கரூரில் நீதிமன்ற உத்தரவை மீறி நடைபெற்ற சேவல் சண்டை: போலீசார் விசாரணை
X

சேவல் சண்டை நடைபெற்ற இடத்தில் பொருட்களை பறிமுதல் செய்யும் போலீசார் 

கரூர் திருமாநிலையூர் பகுதியில் உள்ள பேருந்து டெப்போ அருகே திமுக நிர்வாகிகளான கோல்டு ஸ்பாட் ராஜா, தம்பி சுதாகர் ஆகியோருக்கு சொந்தமான பிளக்ஸ் வேஸ்ட் கழிவுகள் கொட்டுவதற்காக குடோன் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த குடோன் அருகில் இன்று அனுமதியின்றி சேவல்கட்டு நடைபெற்று வந்த நிலையில், இது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

இந்நிலையில், அங்கிருந்த ராமானுஜம் நகர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (வயது 26) என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், 10 க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்து ஒரு இறந்த சேவல் மற்றும் சேவல் காலில் கட்டப்படும் கத்திகள் மற்றும் 10 இருசக்கர வாகனத்தை பசுபதிபாளையம் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 15 Jan 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  2. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  3. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  4. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  5. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  6. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    நட்பு முறிவு கவிதைகள்...!
  8. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  9. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!