/* */

கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் மோசடி? வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள்

கரூரில் விவசாயிகளின் பயிர்கடன்களை தள்ளுபடி செய்ததில் மோசடி நடந்துள்ளதாக கூறி விவசாயிகள் வங்கியை முற்றுகையிட்டனர்.

HIGHLIGHTS

கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் மோசடி? வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள்
X

வங்கியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

கரூர் அருகே ஆத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் தள்ளுபடி செய்ததில் மோசடி நடந்துள்ளதாக கூறி விவசாயிகள் வங்கியை முற்றுகையிட்டனர். மாங்காசோளிபாளையத்தில் ஆத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக அதிமுகவை சேர்ந்த கருமணன் என்பவரும், செயலாளராக துரைசாமி என்பவரும், கம்ப்யூட்டர் ஆபரேட்டராக சதீஷ்குமார் என்பரும் உள்ளனர்.

இந்த வங்கியில் 1,275 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 205 பேருக்கு கடந்த ஆட்சியில் பயிர்கடன் தள்ளுபடி ஆனது. இதில் 15 பேருக்கு இதுவரை பயிர் கடன் தள்ளுபடி ஆகவில்லை. இதில் முறைகேடு நடத்துள்ளதாக்க் கூறி சுமார்50 க்கும் மேற்பட்டோர் இன்று வங்கியை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கூட்டுறவு துறை அதிகாரி ரமேஷ் வங்கிக்கு சென்று ஆய்வு செய்தார். அதில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதில் சமாதானமடைந்த விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Updated On: 30 July 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்