/* */

53 கோடி கள்ள நோட்டை காட்டி மோசடி செய்த பெண் கைது

கன்னியாகுமரியில் 53கோடி ரூபாய் கள்ள நோட்டுக்களை காட்டி மோசடி செய்ய முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

53 கோடி கள்ள நோட்டை காட்டி மோசடி செய்த பெண்  கைது
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் கள்ள நோட்டுக்கள், மற்றும் போலியான நோட்டுகளை புழக்கத்தில் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டார்.


அதன்பேரில் மாவட்டத்தில் தனிப்படை ஏற்படுத்தப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் பளுகல், கொடவிளாகம் பகுதியை சேர்ந்த சிந்து(34) W/O சிபு என்பவர் லோன் வாங்கி தருவதாக கூறி போலியான ரூபாய் நோட்டுகளை காண்பித்து மோசடி செய்து வருவதாக செம்மங்காலை பகுதியை சேர்ந்த வினுக்குமார் என்பவர் அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விரைந்து சென்ற தனிப்படையினர் சிந்துவிடம் சென்று விசாரணை செய்ததில் அவர் போலியான நோட்டுகளை காண்பித்து மோசடி செய்வது தெரியவந்தது. உடனே அருமனை காவல் நிலைய ஆய்வாளர் ஞானராஜ் அவர்கள் சிந்து மீது வழக்குபதிந்து அவரை கைது செய்தார். அவரிடமிருந்து ரூபாய் 52 கோடியே 61 லட்சம் மதிப்பிலான போலி நோட்டுகள் கைப்பற்றபட்டது . போலி நோட்டுகளை காண்பித்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணை உடனடியாக கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.

Updated On: 29 April 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  3. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  4. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  6. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  9. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...