/* */

காதல் திருமணம் செய்த மாணவி தீயில் கருகி பலி - ஆர்டிஓ விசாரணை

குமரியில் காதல் திருமணம் செய்த மாணவி தீயில் கருகி பலியான நிலையில் ஆர்டிஓ மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

HIGHLIGHTS

காதல் திருமணம் செய்த மாணவி தீயில் கருகி பலி - ஆர்டிஓ விசாரணை
X

பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மறவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் லிசா (19) தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தபோது இவருக்கும் அதே பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணிபுரியும் மார்தாண்டம் பகுதியை சேர்ந்த விஷ்ணு ( 24 ) என்பவருக்கும் காதல் ஏற்பட்டு உள்ளது.

இதற்கு இரு வீட்டார் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் எதிர்ப்பை மீறி இருவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டு மார்தாண்டம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் மனைவிக்கு சமையல் செய்ய தெரியாது என்ற காரணத்தால் அவ்வப்போது இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 30 தேதி லிசா உடலில் தீ பற்றி எரிய அலரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டனர்.

உடலில் எரிந்த நெருப்பை அணைத்து 70 சதவீத தீ காயங்களுடன் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் நேற்று நள்ளிரவு லிசா சிகிட்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இதனிடையே வழக்கு பதிவு செய்த மார்தாண்டம் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் திருமணம் ஆகி மூன்று மாதங்களே ஆனதால் ஆர்டிஓ விசாரணையுடன் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

Updated On: 9 Jan 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’