/* */

குமரி வள்ளவிளை அம்மன் கோவில் தீமிதி திருவிழா: பக்தர்கள் தரிசனம்

குமரியில் வள்ளவிளை அம்மன் கோவில் ஊர்பவனி மற்றும் தீமிதி திருவிழா பக்தி பரவசத்துடன் கோலாகலமாக நடந்தது.

HIGHLIGHTS

குமரி வள்ளவிளை அம்மன் கோவில் தீமிதி திருவிழா: பக்தர்கள் தரிசனம்
X

வள்ளவிளை ஶ்ரீ ராஜராஜேஸ்வரி இசக்கியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் பக்தகர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம் வள்ளவிளை ஶ்ரீ ராஜராஜேஸ்வரி இசக்கியம்மன் கோவில் திருவிழா கடந்த 14 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பல்வேறு விழாக்களுடன் நடந்து வந்தது.

இந்நிலையில் 10 ம் திருவிழா நாளான இன்று அம்மன் சுவாமிகள் இருவரும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி ஊர் பவனி வந்தார். முன்னதாக செண்டை மேளம், நய்யாண்டி மேளம், தாலப்பொலி, விளங்குகெட்டு, காவடி கட்டுகளுடன் ஊர்வலம் கோலாகலமாக நடந்தது.

கோவில் வளாகத்தில் இருந்து துவங்கிய இந்த ஊர்வலம் மேடவிளாகம், கண்ணனாகம் சந்திப்பு, இளம்பாலம் முக்கு வழியாக கோவில்வளாகம் வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இறங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

தொடர்ந்து வாணவேடிக்கையுடன் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவுற்றது. அதனை தொடர்ந்து இரவு 12 மணிக்கு குருதி பூஜை கொடுக்கப்பட்டது. இந்த விழாவில் தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 24 Feb 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  5. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  6. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  8. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  9. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு