/* */

பதறவைத்த தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்த சிசிடிவி காட்சிகள்

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகின.

HIGHLIGHTS

பதறவைத்த தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்த சிசிடிவி காட்சிகள்
X

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை வேளையில் கரை திரும்பி தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் நுழைய முயலும் போது முகத்துவார பகுதியில் குவிந்து கிடந்த மணல் மேட்டில் சிக்கி படகு கவிழ்ந்தது.

இதில் 6 மீனவர்கள் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், இனையம்புத்தன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த ஆண்டனி பிரிட்டின் என்ற மீனவர் மட்டும், படகின் அடிப்பகுதியில் சிக்கி நீந்தி வர முடியாமல் உயிரிழந்தார்.

இதனையடுத்து, சக மீனவர்கள் உயிரிழந்த மீனவரை உடலை மீட்டு கரை கொண்டு வந்து, குளச்சல் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்று பரிசோதித்தனர். அதில் அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த விபத்து குறித்த சிசிடிவிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் இரண்டு படகுகள் கரை திரும்பி வந்து கொண்டிருக்கின்றன. ஒரு படகு மட்டும் அலையில் சிக்கி கடலுக்குள் கவிழ்ந்தது மற்றொன்று அதிர்ஷ்டவசமாக தப்பி வந்தது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்பவர் நெஞ்சை பதற வைத்துள்ளது.

Updated On: 20 July 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  2. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  3. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  4. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  6. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  7. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  8. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!