/* */

வறுமையில் பெற்றோரால் கைவிடப்பட்ட 15 வயது சிறுவன் - காப்பகத்தில் சேர்ப்பு

வறுமையின் காரணமாக பெற்றோரால் கைவிடப்பட்ட 15 வயது சிறுவன் தன்னார்வலர் உதவியால் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

HIGHLIGHTS

வறுமையில் பெற்றோரால் கைவிடப்பட்ட 15 வயது சிறுவன் - காப்பகத்தில் சேர்ப்பு
X

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் 15 வயதே நிரம்பிய சிறுவன் அபிலாஷ், 10 வகுப்பு வரை படித்துள்ள சிறுவன் கொரோனா காரணமாக பள்ளிகள் அடைக்கப்பட்டுள்ளதால் வீட்டிலேயே இருந்து வந்துள்ளான்.

தந்தையை இழந்த சிறுவனின் தாய்க்கும் கொரோனா காரணமாக வேலை எதுவும் இல்லாததால் வீட்டில் வறுமை தலைவிரித்தாடி உள்ளது, இதனால் நேரத்திற்கு உணவுகள் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.

மேலும் சிறுவனின் தாயார் வறுமை காரணமாக மகன் மீது அக்கறை காட்டாமலும் இருந்துள்ளார், இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய அபிலாஷ் திக்கணங்கோடு பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தின் குருசடியில் தங்கி அருகில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் உள்ளவர்கள் அளிக்கும் உணவுகளை வாங்கி சாப்பிட்டு மழையிலும் வெயிலிலும் போராட்டத்துடன் வாழ்ந்து வந்துள்ளான்.

இந்நிலையில் சிறுவனின் நிலையை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பசியில்லா குமரி என்ற அமைப்பின் மூலம் சாலை ஓரங்களில் தங்கி இருக்கும் முதியவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்றவர்களுக்கு உணவழிக்கும் கருங்கல் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சிபு என்பவரிடம் தெரிவித்து உள்ளார்.

இந்த தகவல் அறிந்து சிறுவனை சந்தித்த சமூக ஆர்வலர் சிறுவனின் நிலமை மற்றும் ஆசைகளை கேட்டறிந்து திங்கள்சந்தை பகுதியில் உள்ள ஹேப்பி ஹோம் சிறுவர்கள் காப்பகத்தில் இணைத்து விட்டு மாணவரின் கல்வி செலவு போன்றவற்றை ஏற்றுள்ளனர்.

இதனால்ஆதரவற்று வாழ்வை இழந்து போக இருந்த வருங்கால பொறியாளர் ஒருவரை மீட்ட சமூக ஆர்வலருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Updated On: 15 July 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’