/* */

கனமழை எதிரொலி - முற்றிலும் பாதிப்பை சந்தித்த ரப்பர் விவசாயம்

தொடரும் கனமழையால், கன்னியாகுமரி மாவட்டத்தில், ரப்பர் விவசாயம் முற்றிலும் பாதிப்பை சந்தித்துள்ளது.

HIGHLIGHTS

கனமழை எதிரொலி - முற்றிலும் பாதிப்பை சந்தித்த ரப்பர் விவசாயம்
X

கோப்பு படம்

கன்னியாகுமரி மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு தொடங்கி, கனமழையானது பெய்து வருகிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய விவசாயங்களில் ஒன்றான ரப்பர் விவசாயம் முற்றிலுமாக பாதிப்பை சந்தித்து உள்ளது.

மழைக்காலத்தில், ரப்பர் பால் வெட்ட முடியாது என்ற நிலையில், ரப்பர் பால் வெட்டும் தொழிலை மட்டுமே நம்பி வாழும் நூற்றுக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். மாவட்டத்தில், மலையோர பகுதிகளான பெருஞ்சாணி, சிவலோகம், அருமனை உள்ளிட்ட மேற்கு மாவட்ட பகுதிகளில் பெருமளவில் ரப்பர் விவசாயம் நடைபெறும் நிலையில் அந்த பகுதிகளிலேயே அதிக அளவில் மழையும் பதிவாகி உள்ளது.

அதன்படி, புத்தன் அணை பகுதியில், 37.2 மிமீ மழையும், பெருஞ்சாணி பகுதியில் 36.0 மிமீ மழையும், சிவலோகம் பகுதியில் 27.0 மிமீ மழையும் பதிவாகி உள்ளது.

Updated On: 28 Sep 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...