/* */

மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட மருத்துவமனை தற்காலிக தூய்மை பணியாளர்கள்

குமரியில் ஆய்வு பணிகள் மேற்கொண்ட மாவட்ட ஆட்சியரை மருத்துவமனை தற்காலிக தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.

HIGHLIGHTS

மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட மருத்துவமனை தற்காலிக தூய்மை பணியாளர்கள்
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் கீழ் சுமார் 250 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், கொரானா தொடங்கிய காலகட்டத்தில் இருந்து தற்போது வரை தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அரவிந்த், ஆய்வு பணிக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வந்திருந்த நிலையில், ஆட்சியரை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் தற்காலிக துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.

அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கூடி நின்று, தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது தற்காலிக பணியில் இருந்து நீக்கிவிடக்கூடாது என்றும், மருத்துவமனை நிர்வாகம் தங்களுக்கு உரிய வாக்குறுதிகளை தரமறுப்பதாகவும், ஆகவே, நீங்கள் எங்களுக்கு வாக்குறுதியை அளிக்கவேண்டும் என வலியுறுத்தினர்.

அப்போது, இது குறித்து தமிழக அரசிடம் தெரிவிப்பதாகவும், தங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் வாக்குறுதி அளித்த மாவட்ட ஆட்சியர் அங்கிருந்து சென்றார். இச்சம்பவத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 1 Aug 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  2. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  3. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  4. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  5. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  6. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  7. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  8. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  9. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  10. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!