/* */

குமரியில் கனமழையால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

குமரியில் தொடரும் கனமழை காரணமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.

HIGHLIGHTS

குமரியில் கனமழையால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
X

கோப்பு படம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், சுசீந்திரம், ஆரல்வாய்மொழி, தக்கலை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் , இன்று அதிகாலை தொடங்கிய கனமழையானது சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும் தொடரும் கனமழை காரணமாக, மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

மேலும், அணைகளில் இருந்து வினாடிக்கு 2200 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது, இதன் காரணமாக அணைகளில் இருந்து நீர் வெளியேறும் ஆற்று பகுதிகளில் மிகவும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இதனிடையே மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, இன்று ஒருநாள் குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி, மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டு உள்ளார்.

Updated On: 11 Nov 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?