/* */

குமரியில் தலைக்கவசம் வாகன சோதனை - காவல் கண்காணிப்பாளர் நேரடியாக ஆய்வு

கன்னியாகுமரியில் தலைக்கவசம் குறித்த வாகன சோதனையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக நடத்தினார்.

HIGHLIGHTS

குமரியில் தலைக்கவசம் வாகன சோதனை - காவல் கண்காணிப்பாளர் நேரடியாக ஆய்வு
X

கன்னியாகுமரியில் எஸ்.பி. ஹரி கிரண் பிரசாத்  ஹெல்மட் அணிவதன் அவசியம் பற்றி மக்களிடம் நேரடியாக பேசினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமலும், உரிய ஆவணங்கள் இன்றியும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகத்துடன் வாகனங்களை இயக்குவதால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.

மேலும் விதிமுறைகளை மீறி செயல்படும் வாகன ஓட்டிகளால் சரியான முறையில் வாகனங்களை இயக்கி வரும் வாகன ஓட்டிகளுக்கும், சாலையில் நடந்து செல்லும் பொது மக்களுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்கவும் போக்குவரத்து விதி மீறல்களை தடுக்கவும் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.நாகர்கோவிலில் காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் சாதாரண உடையில் நேரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது தலைக்கவசம் அணியாமல் வந்த நூற்றுக்கும் மேற்பட்டோரின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்த அவர் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறினார்.

Updated On: 22 April 2022 9:06 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  4. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  6. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  7. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  9. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து
  10. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை