/* */

நிபா வைரஸ் எதிராெலி: குமரி எல்லையில் சோதனையை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

கேரளாவில் நோய் தொற்று குறையாத நிலையில் குமரி எல்லை சோதனை சாவடியில் சோதனையை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.

HIGHLIGHTS

நிபா வைரஸ் எதிராெலி: குமரி எல்லையில் சோதனையை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
X

கேரளா மாநிலத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில் அங்கு தினசரி நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து காணப்படுகிறது.

கேரளா மாநிலம் முழுவதும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது நிபா வைரசும் கேரளாவை மிரட்டி வருகிறது.

இந்நிலையில் தமிழக கேரளா எல்லை சோதனை சாவடிகளில் சோதனை தீவிரப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழக கேரளா எல்லை சோதனை சாவடிகளில் சோதனை தீவிரப்படுத்தப்படாதது குமரி மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நுழையும் 13 சாலை பகுதிகளில் சோதனை சாவடிகள் இருக்கும் நிலையில் பிரதான சோதனை சாவடியான களியக்காவிளை சோதனை சாவடியை தவிர வேறு எந்த சோதனை சாவடிகளிலும் சோதனைகள் நடைபெறுவது இல்லை.

களியக்காவிளை சோதனை சாவடியிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் வாகன சோதனை மட்டும் நடைபெறும் நிலையில் பேருந்துகள், ஆட்டோ, இருசக்கர வாகனம் மூலம் ஏராளமானோர் எந்த தங்கு தடையும் இன்றி குமரி மாவட்டம் வந்து செல்வதால் குமரியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இதனிடையே கடந்த ஆட்சி காலத்தில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது போல் அனைத்து சோதனை சாவடிகளிலும் காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதார துறை கொண்ட குழு அமைத்து சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Updated On: 7 Sep 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்